• Breaking News

    தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

     


    மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (ஆக., 18) கனமழையும், திருநெல்வேலி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிக்கை:

    வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும், நாளையும், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், துாத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

    நாளை, கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

    அதிகபட்சமாக நேற்று, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 8 செ.மீ., மழை பெய்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆகியவற்றில் தலா 7; கரூரில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    No comments