• Breaking News

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

     


    தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட்.20) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம் கிருஷ்ணகிரி,மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    No comments