• Breaking News

    மயிலாடுதுறை புதுத்தெரு நல்லதுகுடி தார் சாலை மண் சாலையானதால் மக்களுக்கு பெரும் அவதி.... விரைந்து சீரமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை


     மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட ஐந்தாம் நம்பர் புது தெரு சாலை பத்துக்கு மேற்பட்ட கிராமங்களை இணைக்கும்   பிரதான சாலையாக உள்ளது. இச்சாலையை கடந்து தான் மயிலாடுதுறை நகரத்திற்கு நல்லதுகுடி கோடங்குடி செருதியூர் கடக்கும் எலுமிச்சம்பாத்தி உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் வேலைக்கு செல்வோரும் விவசாய பெருங்குடி மக்களும் சென்று வர வேண்டும். கடந்த பல மாதங்களாகவே இச்சாலை தார்சாலையா மண்சாலையா என்று கண்டறிய முடியாத அளவிற்கு முழுமையாக சேதம் அடைந்து கொண்டும் குழியுமாக காணப்படுகின்றது.

     இச்சாலைக்கு அருகில் தான் திருமண மண்டபங்கள் அமைந்துள்ளன. முக்கியமான வங்கித் துறை தலைமை அலுவலகம் இங்கே தான் அமைந்துள்ளது. மேலும் அடுத்தடுத்து மழைக்காலங்கள் வருகின்ற காரணத்தினால் விரைந்து இச்சாலை சீரமைக்கப்பட வேண்டும். நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும் செல்வதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். மக்களுக்கு மிகவும் தவிர்க்க முடியாத சாலையாக பயன்பாட்டிற்கு உரிய சாலையாக இருக்கின்ற காரணத்தினால் உடனடியாக இச்சாலையை மேம்படுத்தி தர வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    No comments