அறந்தாங்கி,ஆவுடையார்கோவில் பகுதிகளில் மின்நிறுத்தம் அறிவிப்பு
நாகுடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், அமரடக்கி, வல்லவாரி, அறந்தாங்கி, அழியாநிலை, கீரமங்கலம், ஆவணத்தான் கோட்டை , மறமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பகுதிகளான அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், நாகுடி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம், ஏம்பல், வல்லவாரி, அழியாநிலை, சிலட்டூர், குரும்பூர், மறமடக்கி, ஆளப்பிறந்தான், கம்மங்காடு, துரையரசபுரம், ஆவனத்தான்கோட்டை, கீரமங்கலம், மறமடக்கி ஆகிய பகுதிகளில் வரும் 16ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும், இது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது" என்றும் அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் மீமிசலில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற இருப்பதால் கொடிக்குளம் துணைமின் நிலையத்தில் மின் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், மீமிசல், அரசநகரிப்பட்டினம், அம்பலவானேந்தல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வழக்கம்போல் மின்விநியோகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments