• Breaking News

    4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை.... எந்தெந்த மாவட்டம்...?


    தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற கோவில் பண்டிகைகளின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் அம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது.  அதன்படி தற்போது ஆடி மாதம் என்பதால் பல ஊர்களில் பண்டிகைகளும் சிறப்பு நாட்களும் வருவதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஜூலை 29ஆம் தேதி ஆடி கிருத்திகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்திற்கு ராஜராஜ சோழன் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்திற்கு ஆடிப்பெருக்கு மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 3 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி பணிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    No comments