மனைவிக்கு பிறந்தநாள்..... மின்விளக்கு அலங்காரம் செய்த கணவர் மின்சாரம் தாக்கி பலி
மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட மின்விளக்கு அலங்காரம் செய்தபோது, மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தவர் அகஸ்டின் பால் (29). இவரது மனைவி கீர்த்தி (25). இந்த தம்பதியினருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலையில் கீர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சீரியல் பல்ப்களைவைத்து அகஸ்டின் பால் வீட்டில் அலங்காரம் செய்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து மனைவி கண்முன்னே அகஸ்டின் பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments