• Breaking News

    கும்மிடிப்பூண்டி அருகே தேவம்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த மங்களாம்பிகை சமேத சோமேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தேவம்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு மங்களாம்பிகை சமேத சோமேஸ்வரர் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.

    இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து கடந்த 3 நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர்.தொடர்ந்து புதிய சிலைகள் பிரதிஷ்டை, கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றன.

    இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தப்பட்டு பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

    இதனையடுத்து அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன் தொழில் அதிபர் கே ஆர் கே முரளி ஒப்பந்தக்காரர் ஹரி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவில் நிர்வாக சார்பில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

     கும்முடிபூண்டி .நிருபர். எம் சுந்தர்

    No comments