தாம்பரம் மாநகர திமுக தொழிலாளர் அணி சார்பில் தண்ணீர்,மோர் பந்தல்
தாம்பரம் மாநகர தி.மு.க தொழிலாளர் அணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கழக இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி, தாம்பரம் மாநகர செயலாளர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ அவர்களின் வழிகாட்டுதலின்படி, தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டல குழு தலைவரும், பகுதி கழக செயலாளருமான டி.காமராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தாம்பரம் மாநகராட்சி சண்முகம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில், தாம்பரம் மாநகர தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் எஸ்.மகேஷ் அவர்களின் ஏற்பாட்டில், தாம்பரம் மாநகர தொழிலாளர் அணி தலைவர் செள.ஆரோக்கியராசு, துணை தலைவர் இரா.குளஞ்சிநாதன், துணை அமைப்பாளர் ஏ.ஆறுமுகம், ஆகியோர் முன்னிலையில், பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர் ஜா.ரவிக்குமார், தாம்பரம் மாநகர தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சிட்லபாக்கம் இரா.விஜயகுமார் ஆகியோர் கோடை வெப்பம் தாக்கத்தை தணிக்கும் விதமாக பொது மக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, பழரசம் ஆகியவற்றை வழங்கினார்கள். இந்நிகழ்வில், பி.வி.ஏகாம்பரம், கோ.ராஜேந்திரன், வழக்கறிஞர் பாபு, ஜி.பார்த்திபன், இளைஞரணி நிர்வாகி இ.நவீன், வாட்டர் மோகன், எஸ்.விஜய், ஜே.டேவிட், மு.கணபதி, உள்ளிட்ட கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments