கும்மிடிப்பூண்டி: நடைபாதை வியாபாரிகளுக்கு நிரந்தர இடம்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்,வட்டாட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி சேர்ந்த துராப்பள்ளம் பஜாரின் 60 ஆண்டுகளாக நடைபாதை வியாபாரம் செய்து வந்தனர் தற்சமயம் ஆறு வழி பாதைக்காக பாதாள மேம்பாலம் கட்டுவதற்காக பணிகள் நடைபெறுவதால் கடையில் அப்புறப் படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் அரசாங்க சொந்தமான இடத்தில் கடைகள்கட்டித் தரவும் மேலும் ரேஷன் கடை கட்டிடத்தை கட்டித் தரவும் உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) ரவியிடம் மனு அளித்தனர்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் வியாபாரம் சங்கம் சார்பில் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் வேலை நிறுத்தம் செய்ய பாதுகாப்பு தர வேண்டும் என்று தெரிவித்தனர் உடன் வியாபாரி சங்க நிர்வாகிகள் நடைபாதை வியாபாரிகள் பெண்கள் உடன் இருந்தனர்.
கும்மிடிப்பூண்டி நிருபர். எம். சுந்தர்.
No comments