• Breaking News

    கீழ்வேளூர் அருகே 54 வது தொழிற்சங்க அமைப்பு தினம் அனுசரிப்பு

     

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த சாட்டியக்குடி கடைதெருவில் இந்திய தொழில் சக மையம் சி ஐ டி யு சார்பில் 54 ஆவது தொழிற்சங்க அமைப்பு தினம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் விபி நாகை மாலி தலைமையில்  கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

    இந்நிகழ்வில் சி ஐ டி யு மாவட்ட செயலாளர் தங்கமணி, சுமைப்பணி அமைப்பு மாவட்ட செயலாளர் டி. ஜெயராமன், எம். என் அம்பிகாபதி, ஆதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலா சரவணன், சி பி ஐ எம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். முத்தையன் சி ஐ டி யு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், சி பி ஐ எம் கிளை கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி

    விளம்பர தொடர்புக்கு 9 7 8 8 8 3 4 1834.

    No comments