எந்தக் கட்சி இருக்கும், எது காணாமல் போகும் என்பது ஜூன் 4-க்கு பின் தெரியும்..... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அண்ணாமலை பதிலடி
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கானாடுகாத்தான் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தபோது, ஏற்கனவே திருமயத்திற்கு சாமி கும்பிட வருவதாக அளித்த உத்திரவாதத்தை நிறைவேற்றவே அமிர்ஷா தமிழகம் வந்தார் என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் துவக்கத்தின் போதும் தேர்தல் இறுதி பரப்புரையின் நிறைவு செய்யும் போதும் மோடி மற்றும் அமித்ஷா வந்தது தமிழகத்தின் மீது அவர்கள் காட்டும் மரியாதையை வெளிப்படுத்துகிறது என்றார். கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திராவிற்கு சொந்தமான விவேகானந்தா பாறைக்கு தியானம் செய்யதான் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார்.
இது அவரது தனிப்பட்ட நிகழ்ச்சி என்றவர். இந்துத்துவா என்பது எந்த மதத்திற்கும் எதிரி கிடையாது. இந்துத்துவாவை பற்றி மக்கள் மன்றத்தில் விவாதிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றவர், ஜூன் 4 தேர்தல் முடிவுக்குப் பிறகு எந்த கட்சி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் விளக்கு அணைவதற்கு முன் பிரகாசமாக இருப்பது போல் ஜெயக்குமார் பேசி வருகிறார் என பதிலடி கொடுத்தார், மேலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைத்து உள்ளோம். முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என அண்ணாமலை தெரிவித்தார்.
No comments