நாகை: ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுநருக்கு டாக்டர் பட்டம் விருது
நாகப்பட்டினம் : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுனர் சமூக ஆர்வலர்.டாக்டர் .ஸ்ரீரங்கபாணி சர்வதேச சாதனையாளர் அமைப்பு சார்பில் மதிப்புமிக்க டாக்டர் விருது வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டம், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைத் திருமணத் தடுப்பு, தொழிலாளர் நலன், அரசின் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கியது.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலமாக கொரானா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்தது, கொரோனா காலத்தில் 5000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கியது ,தொழிலாளர்களுக்கு மன நலம் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் வழங்கியதற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுநர் சமூக ஆர்வலர். டாக்டர்.நா. ஸ்ரீரங்கபாணி க்கு வெல்னாஷ் பவுண்டேசன் , உலக சாதனை கூட்டமைப்பு -இந்தியா இணைந்து சமூகப்பணி மற்றும் சமூக சேவைக்காக மதிப்புமிக்க டாக்டர் விருது வழங்கப்பட்டது. .இவரை சமூக ஆர்வலர்களும், மற்றும் பொது மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்ட நிருபர் க.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு அணுகவும் 9788341834
No comments