• Breaking News

    தமிழ் புத்தாண்டையொட்டி 30 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை...... பாஜகவினர் உற்சாக விநியோகம்.....

     

    தமிழ் புத்தாண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இன்று நாளை தமிழக மக்கள் நீராடி புத்தாடை அணிந்து தங்கள் வீடுகளில் புத்தாண்டை வரவேற்கும் பூஜைகளை செய்கின்றனர். அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த புத்தாண்டை முன்னிட்டு பாஜகவினர் பிரதமர் மோடியின் கையெழுத்துடன் கூடிய வாழ்த்து அட்டைகளை  பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதற்காக பாஜக மாநில தலைமை சார்பில், தமிழகம் முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அந்த வாழ்த்து அட்டையில் 'உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த குரோதி வருட புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும். மாற்றங்கள் மலரட்டும். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்' என்ற வாசகம் மோடியின் உருவப்படத்துடன் இடம் பெற்றுள்ளது. அதற்கு அதற்கு கீழ் அவரது கையெழுத்து இந்தி மொழியில் இடம் பெற்றுள்ளது.

    பிரதமர் மோடி அண்மையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வேலூர் வந்திருந்த போது தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவரது கையெழுத்துடனான வாழ்த்து அட்டைகள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    தமிழ் மக்கள் மீது பிரதமருக்கு அன்பு இருப்பதை உணர்த்தவும், தமிழ் மக்களின் வாக்குகளை பெறவும் பாஜக இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    இந்த வாழ்த்து அட்டைகளை பொதுமக்களிடம் பாஜக நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், அந்தந்த        மாவட்டங்களில் பாஜக நிர்வாகிகளும் தனியாக வாழ்த்து அட்டைகளை அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

    No comments