• Breaking News

    நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் செல்பி

     


    தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவை இந்த மாதம் சந்தித்தது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பின்னர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதில் வீடுகள், சாலைகள், பல்வேறு கட்டமைப்புகள் என அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டன.


    இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.


    இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் இன்று வழங்கினார். நெல்லை கே.டி.சி.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உதவிகளை வழங்கினார்.


    இந்த நிலையில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் செல்பி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    No comments