கரூரில் பூ கட்டி விற்கும் சிறு வியாபாரிகளை தகாத வார்த்தையில் பேசிய பூ கமிஷன் மண்டி தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கரூரில் பூ கட்டி விற்கும் சில்லற வியாபாரிகள்,பூ கமிஷன் மண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு செய்து வந்ததை தொடர்ந்து சிறு வியாபாரிகளை தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பூகமிஷன் மண்டி தலைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறு வியாபாரிகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கரூர் மாநகராட்சி சுற்றுவட்டார பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனையாக பெண்கள் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்,நத்தம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்த கொள்முதல் செய்து வந்து விற்பனை செய்து வரும் கரூர் ஸ்ரீ மாரியம்மன் பூகமிஷன் மார்க்கெட்டில் ஏலம் விட்டு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பூ விற்பனை தொழில் செய்து வரும் சில்லரை வியாபாரிகளுக்கும், வெளியிலிருந்து வரும் பொதுமக்களுக்கும் அதே விலையிலும் விற்பனை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த பூக்கட்டும் தொழிலாளர்கள், பூக்கடை உரிமையாளர்கள் மண்டி கமிஷன் தலைவரிடம் முறையிடுட்டனர்,அப்போது வெளி ஆட்களுக்கு பூக்கள் வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை வைத்தனர்.
இதனால் சிறுகுரு வியாபாரிகள் இந்த கோரிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் விதத்தில் உள்ளது எனவே சில்லறை பூ வியாபாரிகளுக்கு எதிராக கரூர் ஶ்ரீ மாரியம்மன் புஷ்ப வியாபாரம் மண்டி செயல்பட்டு வருவதாக பூ வியாபாரிகள் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து இனிவரும் நாட்களில் பூக்கடை நடத்தி வரும் சிறுகுரு வியாபாரிகளை தவிர வெளியில் இருந்து வரும் பொது மக்களுக்கு அனைத்து பூக்களும் கிலோ கணக்கில் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.பொதுமக்களுக்கு தனியாகவும், வியாபாரிகளுக்கு தனியாகவும் ஏலம் விட வேண்டும் என்று அவர்களுடைய முக்கியமான கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கருவூர் ஸ்ரீ மாரியம்மன் பூ வளாகத்தின் சங்க தலைவர் முருகேசன், பூவிற்கும் சிறுகுறு வியாபாரிகள் பெண்கள் மற்றும் ஆண்களிடம் தகாத வார்த்தையில் பேசி வந்ததால், பூ வியாபாரிகள் சங்கத் தலைவரை முற்றுகையிட்டு கரூர் மாவட்ட காவல் துறையினர் வரவழைக்கப்பட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த கரூர் மாவட்டகாவல் துறையினர் சிறு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட காவல்துறையினர் சிறுகுரு வியாபாரிகள் மற்றும் பூக்கடை வியாபாரிகள் மேலும் கரூர் ஸ்ரீ மாரியம்மன் பூ மண்டி கமிஷன் தலைவர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமூகமான தீர்வை எட்டியதை எடுத்து அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கரூர் மாவட்ட செய்தியாளர், மோகன்ராஜ்,
93857-82554
No comments