குத்தாலம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் திருத்துருத்தி என்னும் குத்தாலத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 1-ம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து கொடியேற்றுதல்,தினமும் இரவு அம்பாள் வீதி உலா உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது விழாவின் பத்தாம் நாள் உற்சவமான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.
முன்னதாக காவிரி தீர்த்தபடித்துறையிலிருந்து சக்தி கரகம் புறப்பட்டு ஊர்வலமாக வான வேடிக்கை மேளதாள வாத்தியங்களும் முழங்க கோவிலை வந்தடைந்தது பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.இரவு அன்னவாகனத்தில் அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments