வில்லியநல்லூர் ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பால்குட விழா நடைபெற்றது.ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் பத்தாம் ஆண்டு பால்குட தீமிதி திருவிழா கடந்த 1-ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் செய்து காப்பு கட்டுறதுடன் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து தினமும் இரவு அம்பாள் வீதி உலா உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
இன்று பன்னிரண்டாம் நாளான பால்குட விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக காவிரி தீர்த்தபடித்துறையிலிருந்து அபயாம்பிகை யானை முன்னே செல்ல சக்திகரகம் பால்குடங்களுடன் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டு கேரளா கெண்டை மேளம் முழங்க வான வேடிக்கை மேளதாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு 12 கிரகங்கள் கொண்டு பால் அபிஷேகம் ஆராதனை நடைபெற்று.மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.இவ்விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள்,இளைஞர் நற்பணி மன்றம்,லவ்லி பாய்ஸ்,மகளிர் சுய உதவி குழுக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.நாளை14 தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments