மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி சார்பில் 7-ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்
மயிலாடுதுறையில் ஓஎன்ஜிசி சார்பில் ஏழாம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி நேற்று முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இன்று இரண்டாம் நாள் போட்டிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று துவக்கி வைத்தார்.
தொடர்ந்து விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரையாற்றினார்.லீக் சுற்றுக்களாக நடைபெறும் இந்த போட்டியில் காரைக்கால், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்-பெண் இருபாலர் என மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டுள்ளனர்.
நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு தலா முறையே ரூ.30000, 20000, 15,000, 10,000 ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டிகளை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
No comments