வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என கடன் வாங்கியவரின் மகளை கடத்திய பைனான்ஸ் நிறுவன ஊழியர்
புதுக்கோட்டை மாவட்டம்,கீரனூரில் இயங்கி வரும் பிரபல பைனான்ஸ் நிறுவனத்தில் மருதூரைச்சேர்ந்த கூலித் தொழிலாளி வனத்து ராஜா (32)என்பவர் மாதாந்திர தவணையில் ரூ50, ஆயிரம் கடன்வாங்கி உள்ளார்.இதில் சில ஆயிரங்களை அவர் கட்டாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பெரிய சூரியூரைச் சேர்ந்த தங்கம் மகன் விக்னேஷ் (27)என்பவர் பண வசூலிப்பதற்காக மருதூரில் உள்ள அவரதுவீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு வனத்து ராஜா வேலைக்கு சென்றுள்ளதாக அவரது மகள் ஜனனி (11) கூறியுள்ளார்.உடனடியாக அந்த குழந்தையைக் மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு பைனான்ஸ் நிறுவனத்துக்கு வந்து விட்டார். இந்நிலையில் குழந்தையை காணாமல் தேடிய போது பைனான்ஸ் காரர்கள் அழைத்துசென்றதாக அறிந்து உடனடியாக வனத்து ராஜா கீரனூர் போலீசாரிடம் குழந்தையை கடத்தி சென்றதாக புகார் கொடுத்தார். சப் இன்ஸ்பெக்டர் மரிய தாஸ் மற்றும் போலீசார் குழந்தையை கடத்தி வைத்திருந்த பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தி அங்கிருந்து குழந்தையை மீட்டு கொண்டு வந்தனர்.மேலும் குழந்தையை கடத்தி சென்றதாக விக்னேஷ்மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர். கடனுக்காக குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் கீரனூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments