• Breaking News

    சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பாடப்பிரிவு துவக்கம்


    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இளங்கலை தாவரவியல் பாடப்பிரிவு 2023 - 2024 கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கைக்கான  விண்ணப்பம் விநியோகம் கடந்த  8-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் முதல்வர் முனைவர்.க. ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. 

    சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 2023 - 2024 கல்வியாண்டு முதல் ஈரோடு மாவட்டத்திலேயே முதல் முறையாக இளங்கலை பி.எஸ்.சி தாவரவியல் பாடப்பிரிவு புதிதாக துவக்கப்பட்டுள்ளது. மேல்நிலை கல்வியில்(+2) உயிரியல் அல்லது தாவரவியல் பயின்ற மாணவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். இதற்கான  ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் கடந்த 8-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இதற்கான கடைசி நாள் மே மாதம் 19ம் தேதி ஆகும்.  மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை 9363462099 என்ற கல்லூரி கல்வி இயக்கக அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இதற்கான உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரியில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்திற்கு நேரடியாக வந்திருந்து தங்களது சுய விவரங்களை தெரிவித்து விண்ணப்பித்து கொள்ளலாம். எனவே ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த மேல்நிலை கல்வி முடித்த மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்து சேர்க்கை  பெற்று பயனடையுமாறு கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments