• Breaking News

    ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது


    ஈரோடு மாவட்டம்,  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக  கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப. விவசாய பெருமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் உதவி ஆட்சியர் ( பயிற்சி ) என்.பொன்மணி இ.ஆ.ப, இணை இயக்குநர் ( வேளாண்மைத்துறை ) சின்னசாமி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வேளாண்மை ) சாந்தாமணி , துணை ஆட்சியர் ( பயிற்சி ) காயத்ரி உட்பட பலர் உள்ளனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

    No comments