அந்தியூர் பேரூராட்சியில் சிறுவர் பூங்காவை அந்தியூர் எம்எல்ஏ திறந்த வைத்தார்
ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் பேரூராட்சியில் 15 வது நிதிக்குழு மான்யம் 2020/2021 திட்டத்தின் கட்டப்பட்ட சிறுவர் பூங்காவை அந்தியூர் பேரூராட்சி மன்ற தலைவர் எம். பாண்டியம்மாள் தலைமையில் அந்தியூர் பேரூராட்சி மன்ற துணை தலைவர் பழனிச்சாமி முன்னிலையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம் எல் ஏ., திறந்துவைத்தார்.
உடன் அந்தியூர் பேரூர் கழக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ்,அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் , பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன்,மாவட்ட பிரதிநிதிகள் பிஎல்பி.வெங்கடேசன் , விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.பி.ரமேஷ் , தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் மு.நாகராஜ் , அந்தியூர் பேரூர் கழக பொருளாளர் சதீஸ்குமார் , அந்தியூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கௌரி , ஈஸ்வரமூர்த்தி, சண்முகம், மணிகண்டன், சேகர், செந்தில்குமார், வெங்கடேஷ், மணிமேகலை, கவிதா, யாஸ்மின் தாஜ், கீதாஞ்சலி, பத்மநாபன், வேங்கையன் ,வார்டு கழக செயலாளர்கள் முத்து, சென்னியப்பன், வீரமணி, ரவி , சையதுமுஸ்தபா, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments