கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலம் மற்றும் சிஎஸ்ஐ புனித பவுலின் ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் இயேசு கிறிஸ்து சிலுவையில் அடைவதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கப்படுகிறது இதில் முக்கிய நிகழ்வாக இயேசு கிறிஸ்து குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக கடைபிடிக்கும் வகையில் குரு தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலம் மற்றும் சிஎஸ்ஐ புனித பவுலின் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு குரு தோலை பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தப் பவனியில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளுடன் ஓசானா பாடல் பாடியவாறு சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர் இதில் கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை அலாசஸ் துரைராஜ் உதவி பங்கு தந்த மகேஷ் மற்றும் சிஎஸ்ஐ ஆலய போதகர்கள் கலந்து கொண்டனர்.
No comments