தாமரைக்குளம் பேரூராட்சி மாதாந்திரம் கூட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக் குளம் பேரூராட்சி கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார்.பேரூராட்சி செயல் அலுவலர் ஆளவந்தார், துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தாமரை குளம் பேருராட்சி உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் கழிவு நீர் வாய்க்கால்கள் மின்விளக்கு வசதிகள் சாலை வசதிகள் ஆகியவை செய்வது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பணி நியமனக்குழு தலைவர் பாலாமணி பழனி முருகன்,ஜாகிர் ஹுசைன்,மைதிலி அன்பழகன்,கவிதா டென்ஷன்,தேவகி தென்னரசு,கோமதி ராதாகிருஷ்ணன்,வசந்தா மூக்கையா,பாண்டி,ராஜேந்திரன்,முருகன்,முனியம்மாள் முத்துலட்சுமி, சாந்தி,உள்ளிட்ட பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்..
No comments